உலக ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதி

உலக ஸ்குவாஷ் போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதிபெற்றார்.

Update: 2019-02-27 21:15 GMT
சென்னை,

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-13, 11-7, 11-7, 13-11 என்ற செட் கணக்கில் வேல்ஸ் வீரர் ஜோயல் மாகினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு முன்னேறி இருப்பது இது 2-வது முறையாகும்.

மேலும் செய்திகள்