பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27–ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.

Update: 2018-05-22 21:00 GMT

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27–ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் ரஷியாவின் எவ்ஜினியா ரோடினாவை நேற்று எதிர்கொண்டார். இதில் ரெய்னா 3–6, 6–7(2–7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடங்கள் நடந்தது.

மேலும் செய்திகள்