விம்பிள்டன் டென்னிஸ்: கெர்பருடன் இன்று மோதுகிறார், செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெர்பருடன், செரீனா இன்று மோதுகிறார்.

Update: 2018-07-13 21:45 GMT
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மல்லுகட்டுகிறார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரீனா, இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான அரை இறுதி ஆட்டம் 5½ மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவு கிடைக்காமல் இழுத்து கொண்டே போனது.

மேலும் செய்திகள்