இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; 7 விமானங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
லட்சக்கணக்கான மக்களை பாதுகாத்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை புகழ்ந்து பேசினார் என்றும் டிரம்ப் அப்போது கூறினார். அவர் தொடர்ந்து கூறும்போது, 2 நாடுகள் மீதும் 200 சதவீத வரிகளை விதிக்க போகிறேன். இதனை எதிர்கொள்வது என்பது உங்களால் முடியாதது. உங்களுடன் நாங்கள் வர்த்தகமும் செய்ய போவதில்லை என 2 நாடுகளிடமும் நான் கூறினேன். இதன்பின்னர், 24 மணிநேரத்தில் நான் போரை நிறுத்தி விட்டேன் என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த மே 10-ந்தேதி முதன்முதலாக சமூக ஊடகத்தில் டிரம்ப், இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடவடிக்கையால், இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய ஒப்பு கொண்டன என பதிவிட்டார். தொடர்ந்து பலமுறை இதனை கூறி வருகிறார். பல போர்களை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்றும் இடையிடையே கூறி வருகிறார்.
எனினும், டிரம்பின் இந்த பேச்சை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறி வருகிறது.