வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025

வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை இன்று துரைப்பாக்கத்தில் வெள்ள நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் துரைப்பாக்கத்தில் வெள்ள நீர் வடிகால் பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2025-10-20 13:32 GMT

Linked news