தமிழகத்தில் 5-ந்தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

தமிழகத்தில் 5-ந்தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (29-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (30-10-2025) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 30-10-2025 முதல் 04-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

05-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Update: 2025-10-30 10:01 GMT

Linked news