டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 24-ந்தேதி தொடங்குகிறது

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2018-09-08 10:48 GMT
திருச்செந்தூர், 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி நடக்க இருக்கிறது.

இத்தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற 11-ந்தேதி ஆகும். இத்தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

பயிற்சி வகுப்புகள்

இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.5 ஆயிரத்து 500 ஆகும்.

இந்த பயிற்சி வகுப்பில் பொது தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் தமிழ் மொழி வாயிலாக மட்டும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

தங்கும் வசதி

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.4 ஆயிரத்து 800-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 24.9.2018 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர....

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.5 ஆயிரத்து 500-க்கான ‘டிமாண்ட் டிராப்ட்’ (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

கடைசி நாள்

பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 17.9.2018 ஆகும்.

பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவல்களுக்கு 04639-242998, 9442055243., 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்