கொடிநாள் நிதி அளிப்பது நம் அனைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்
படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
சென்னை,
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் கொடி நாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்.
மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது.
தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை. என தெரிவித்துள்ளார்.