திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

களக்காடு பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீசார் கவனத்திற்கு வந்தது.;

Update:2025-09-03 15:19 IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சிங்கிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்களான முத்துமாரி (வயது 21), ஞானபாண்டியன்(19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்