தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாளமுத்துநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.;
தூத்துக்குடி தாளமுத்துநகர், அன்னை தெரேசா மீனவர் காலனியைச் சேர்ந்த எட்வர்ட் மகன் வினிஸ்டன் (வயது 30). இவர் தாளமுத்துநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், தாய்நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
கஸ்தூரிக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வாரம் பிரிந்து இருந்தனர். இதனால் வினிஸ்டன் அன்னை தெரசா மீனவர் காலனி பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் குடியிருந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.