2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது..யோகா மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது..மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது யோகாவின் தனித்துவ குணம்..தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை யோகா செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது..தொடர்ச்சியாக யோகா செய்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே தோன்றும்..மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது..யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது..யோகா ரத்த ஓட்டத்தினையும் சீராக்குகிறது..யோகா உடல் எடையையும் குறைக்கிறது..இருப்பினும் சரியான பயிற்சியாளர்களிடம் யோகா ஆசனங்களை கற்றுக்கொள்ள வேண்டும்..ஏடாக்கூடமாக செய்து உடலில் சுளுக்கு, தசைநார்கள் கிழிதல் நிலைக்கு ஆளாகி விடக்கூடாது.