தினத்தந்தி
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
அதனைத் தொடர்ந்து தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கும் தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.