ஈசல்கள் என்பது பெரும்பாலும் மண்ணிற்கு அடியில் கரையான் புற்றுகளுக்குள் வாழும் ஒரு உயிரினம் ஆகும்..மழை வரும் சமயங்களில் இறக்கை முளைத்து வெளியில் பறந்து வந்து ஒளி உள்ள இடங்களை நோக்கி பறந்து தன்னுடைய இறக்கைகளின் சக்தியை ஒரே நாளில் இழந்து விடுகிறது..ஈசல்கள் மழை காலங்களில் அதிக அளவு வெளிச்சத்தை நோக்கி பறக்கும் பூச்சி இனங்களாக இருந்து வருகிறது..ஆரம்ப காலம் முதல் இந்த ஈசல்கலை உணவாகவும் உண்டு வந்துள்ளனர்..பெரும்பாலும் ஈசல்கள் மழை பெய்யும் சமயங்களான ஆடி ஆவணி புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் அதிக அளவு காட்சியளிக்கும்..பெரும்பாலும் ஈசல்கள் இலகுவான உடல் நிலையைக் கொண்டதால் காற்று அதிகமாக வீசும் சமயங்களில் ஈசல்கள் புற்றினை விட்டு அதிகமாக பறப்பதில்லை..கரையான் சிறகு முளைத்து ஈசலாகப் பறப்பதில்லை. அதாவது இனபெருக்கம் செய்ய ராணி-ஈசல் புழு-முட்டை இடும். அம்முட்டையிலிருந்து வெளிவரும் முதிர்வடைந்த புற்றீசல்களே புதுமழை பொழிந்ததும் வெளிவந்து பறக்கும்..Explore