தினத்தந்தி
கேரட்டில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் : கேரட் - கால் கிலோ, எலுமிச்சை பழம் - ஐந்து, பச்சை மிளகாய் - பத்து, பெருங்காயம் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி கடுகு - ஒரு தேகரண்டி, உப்பு - தேவைகேற்ப, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவிக்கொள்ளவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.
அடுத்து ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.
குறிப்பு : விரும்பினால் கேரட்டை நீளமான துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்.