கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர்..தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்..தளபதி விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் நடித்த 'ஆலம்பனா' என்கிற திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது..இந்நிலையில் தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் - பார்வதி நாயர் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டது தற்போது திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது..இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.