ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது..இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும்..கடைசியாக கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட், குழு-7 உடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது..இந்நிலையில் குழு-6 இன் பணிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணி இன்று நடைபெற்றது..இந்த பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது..இதன்மூலம் விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன், ஆண்ட்ரி பெட்யாவ், சுல்தான் அல் நெயாடி மற்றும் வாரன் ஹோபர்க் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.