தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பிரபலமான பழங்கால பழுப்பு அரிசி இந்த பூங்கார் அரிசி. இது மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில் இருக்கும்..பூங்கார் அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் மோலேபிடினம் ஆகிய தாதுக்கள் உள்ளன..பூங்கார் அரிசியில் சற்று அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது..பூங்கார் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் ஒட்டுமொத்த அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது..பூங்கார் அரிசியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கிறது..பூங்கார் அரிசி ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது..பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் பூங்கார் அரிசி பெரிதும் பயன்படுகிறது..கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்..Explore