14.1.2021 முதல் 12.2.2021 வரை
துலாம் ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். ‘தைரியகாரகன்’ செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து தொல்லைகளை போக்கிக் கொள்ள முன் வருவீர்கள். இரண்டில் கேது இருப்பதால் வாக்குறுதி கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது. ஆன்மிக பற்று அதிகரிக்கும்.
எட்டில் ராகு, இரண்டில் கேது
இம்மாதம் அஷ்டமத்தில் ராகு சஞ்சரிக்கிறார். மறைந்த ராகுவால் நிறைந்த தன லாபம் உண்டு. எனினும், தொழிலில் ஏற்ற இறக்க நிலையே காணப்படும். பழைய சேமிப்புகள் கரையலாம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். உறவினர்கள் உதவி செய்வதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். சர்ப்ப சாந்தி வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
கூட்டுக்கிரக யோகம்
மாதத் தொடக்க நாளில் நான்காமிடத்தில், சூரியன், சந்திரன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. இதனால் ஓரளவு நன்மைகள் நடைபெறும். லாப ஸ்தானாதிபதியான சூரியன், நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்தியாகும். தெய்வீக பற்று அதிகரிக்கும். அதே நேரத்தில் அர்த்தாஷ்டம குரு மற்றும் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்திற்காக செலவிட நேரிடும். சொத்துக்களை விற்க முன்வருவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் உண்டு. சகப் பணியாளர்களால் சில முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை மகரத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறும் பொழுது, தந்தை வழியில் அனுகூலங்கள் ஏற்படலாம். பாகப்பிரிவினை தாமதமாகும். பயணங்கள் அதிகரிக்கும். கட்டிய வீட்டை பழுது பார்ப்பதற்காக கணிசமான தொகையை செலவிட நேரிடும். வியாபாரப் போட்டி அதிகரிக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனி பகவானோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறார். அவரது பார்வை உங்களது ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். மேலும் ஜனவரி 22-ந் தேதி சூரியனோடு இணைவதனால், குரு பகவான் சற்று வலிமை இழக்கிறார். எனவே நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தன வரவு திருப்தி தரும். நண்பர்களால் சில சிக்கல்கள் தீரும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வீடு கட்டி குடியேறும் எண்ணம் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமியை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 14, 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 7, 10, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எதிலும் அதிக விழிப்புணர்ச்சி தேவை. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி உங்கள் சேமிப்பில் சிறிது கரையலாம். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்கள், மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நினைத்த இடத்திற்கு மாறுதலும் கிடைக்கும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
விரயங்களைச் சமாளிக்க வேண்டிய ஆண்டு
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
துலா ராசி நேயர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில், குரு மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்கள் சஞ்சரிக்கின்றார்கள். அர்த்தாஷ்டம குருவாகவும், அர்த்தாஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகவும், கூடுதல் விரயங்களைக் கொடுக்கும் ஆண்டாகவும் அமையும் என்றே கருதலாம். சுக ஸ்தானத்தில் வலிமையான கிரகங்கள் சஞ்சரிப்பதோடு, இரண்டில் கேதுவும், எட்டில் ராகுவும் இருந்து சர்ப்ப தோஷ அமைப்பை உருவாக்குகிறது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும்.
குருச்சந்திர யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகம் போன்ற யோகங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாகின்றது. கிரக நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும். ஆனால் அர்த்தாஷ்டமச் சனி என்ற அமைப்பு உங்கள் ராசிக்கு வருவதால் எதிர்பாராத மற்றும் எதிர்பார்த்த விரயங்களும் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தும், அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டும் செயல்பட்டால் சிரமங்களில் இருந்து விடுபட இயலும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு கேதுவும் இருக்கின்றார். அஷ்டம ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். இரண்டு பாம்பு கிரகங்களின் ஆதிக்கத்திற்குள் சந்திரன் நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் இருக்கின்றன. எனவே இனம்புரியாத கவலை தொடர்ந்தபடியே இருக்கும். பண வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இரு மடங்காக உயரும்.
சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்வது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு ஏற்பட்டு பாராமுகமாக இருப்பர். 3-ல் சூரியன் உள்ளதால் இடமாற்றங்கள் எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகளில் ஒருசிலர் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அர்த்தாஷ்டம குரு மற்றும் அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்படும். வாகனப் பழுதுகளும், வாகனங்களால் பிரச்சினைகளும் உருவாகலாம். புதனின் பலத்தால் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீரென இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். 7-ல் செவ்வாய் இருப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. அப்படி இடம் வாங்கும் பொழுது, விசாரித்து வாங்குவது நல்லது. அஷ்டமத்தில் ராகு இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் நீச்சம் பெறுகின்றார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான் நீச்சம் பெறுவது யோகம்தான். மறைவிடத்திற்கு அதிபதி நீச்சம் பெறும்பொழுது, ஓரளவு நற்பலன்களையே வழங்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்பட வைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் சிறப்பாகச்செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்ளும் பஞ்சாயத்துக்கள், இழுபறி நிலையில்தான் இருக்கும்.
6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு பகவான் விளங்குவதால், அவர் நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். குரு வலிமை இழக்கும் நேரம் வளர்ச்சி கூடும். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப சில நல்ல வாய்ப்புகளும் வரலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் ‘மூலதனம் போதவில்லையே’ என்று கவலைப்பட வேண் டாம். வெளிநாட்டில் உள்ள உறவினர்களோ, நண்பர்களோ உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லையின் விளைவாக புதிய உத்தியோகத்தில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறை காட்ட வேண்டும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறைவதற்கான அறிகுறிகள் தென்படும். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதை விற்பதன் மூலம் வரும் தொகையால் வாங்கல் -கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. 8-ம் இடத்தை குரு பார்ப்பதால் இழப்புகள் ஏற்பட்டாலும் அதை ஈடுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் என்றாலும், மாற்று மருத்துவத்தை மேற்கொண்டால் நோய் துரித கதியில் குணமாகும். அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்பு கிட்டும். தொழிலை விரிவுசெய்ய வங்கிகளில் கேட்ட கடனுதவி கிடைக்கலாம். பெண் பிள்ளைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வழிபிறக்கும். வெளிநாட்டிலிருந்து வர முடியாத நிலையிலிருந்த உறவினர்கள், இப்பொழுது சொந்த ஊர் திரும்புவார்கள்.
கும்ப குருவின் வக்ர காலத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியிலேயே பதிகின்றது. 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கிறார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பதற்கேற்ப பொருளாதாரத்தில் உள்ள பற்றாக்குறை மாறும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சூழல் நிலவும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மாறி தகுந்த ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் கேட்ட உதவியைச் செய்வர். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். வெளிமாநிலங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு வக்ரம் பெறுவதால் பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் மாறுதல்கள் ஏற்படும். பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க அவர்களை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள். வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும். நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் உங்களை விட்டு விலக நேரிடலாம். நண்பர்களை நம்பி செயல்பட இயலாது. முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்தில் குறுக்கிடுவர். நிச்சயித்த காரியங்களில் மாற்றங்கள் ஏற்படும். வரும் வரன்களில் கூட தடை ஏற்படலாம்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். 4-ல் குரு வக்ரம் பெறும்பொழுது மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ‘ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாகி கவலை யைக் கொடுக்கும். அலுவலகத் தகவல்களை அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை உங்களோடு இருந்து கற்றுக்கொண்ட பணியாளர்கள் திடீரென விலக நேரிடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகள் உங்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது. தாய்வழி உறவினர்களால் பகை உண்டு. இடம் வாங்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் பத்திரப்பதிவில் சிக்கல்களும் வரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்பட்டு மனக்கவலையைக் கொடுக்கும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலமாகும். இக்காலத்தில் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவரது பார்வை சனியின் மீது பதியும்பொழுது குடும்ப ஒற்றுமை குறையலாம். கொடுக்கல் -வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. வாங்கிய இடத்தை விற்க நேரிடும். பிள்ளைகள் உங்கள் சொற்களுக்கு கட்டுப்பட்டு நடக்க மறுப்பர். வாழ்க்கைத் துணையோடும் பிரச்சினைகள் வந்து அலைமோதும். தாயின் உடல்நலத்தில் தாக்குதல் ஏற்பட்டு அகலும். வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வருமானப் பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்க நேரிடும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும். ‘படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் மறுக்கப்படலாம். ‘விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?’ என்று சிந்திப்பீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இல்லத்தில் அஷ்டலட்சுமியின் படம் வைத்து, லட்சுமி கவச பாராயணங்கள் செய்தால் லட்சியங்கள் நிறைவேறும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய ஆண்டாக அமையும். அதுமட்டுமல்ல பொருளாதாரத்திலும் பற்றாக்குறை ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மூட்டுவலி, முழங்கால்வலி போன்றவை வந்து தொல்லை தரலாம். தாய்வழி ஆதரவு உண்டு. ஒருசில உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்கள் சகப்பணியாளர்களிடம் வேலைகளைப் பற்றியோ, தங்கள் முன்னேற்றத்தைப் பற்றியோ விமர்சனம் செய்யக்கூடாது. பதவி உயர்வில் தடை இருக்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
நான்காமிடத்தில் சனி, நல்ல விரயங்கள் இனி! துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று நான்காமிடத்திற்கு செல்கின்றார். இதை ‘அர்த்தாஷ்டமச்சனி’ என்று சொல்வது வழக்கம். அஷ்டமத்துச் சனி நடைபெறும் பொழுது, ஏற்படும் கெடுபலன்களில் சரிபாதி அளவு இக்காலத்தில் உருவாகும் என்பர். ஆனால் உங்கள் ராசிக்கான அதிபதி சுக்ரன், சனி பகவானுக்கு நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் கெடுபலன்களைக் கொடுக்கமாட்டார். மேலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், சுக ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். சுகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.
தேவைக்கேற்ற பணம் வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப்போகின்றார். இது தாய், சுகம், கல்வி விருத்தி, வீடு, இடம், வாகனம் போன்றவற்றைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவார். மகர ராசி அவருக்கு சொந்த வீடாகும். ஆயுள்காரகன் என்று சனியை வர்ணிப்பதால், உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், உடன்பிறப்புகளுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வரும். எதிலும் கூட்டு முயற்சி உகந்தது. கல்வி, கட்டிடப்பணி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடிவரும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும் 6, 10 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் ஆரோக்கியம், செயல்திறன், கவுரவம், எதிர்ப்பு, வியாதி, கடன் சுமை, மனக்குழப்பம், பங்காளிப் பகை, தைரியம், தொழில், ஜீவனம், அரசுப்பணி, வணிகம், போன்றவற்றை எடுத்துரைக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால், அதற்கு ஏற்ப பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசியைச் சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்கள் வந்து அலைமோதும். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் கடைசியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். ‘உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே’ என்று ஒருசிலர், உத்தியோக மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்து கூட்டுமுயற்சியில் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கூட்டாளிகள் ஜாதகத்தில் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. பழைய தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சூரியன் உங்களுக்கு லாபாதிபதியாகவும் விளங்குவதால் தொழில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் மிகவிரைவில் முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். ‘வீடு கட்டி வைத்தும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் வரப்போகின்றது. இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடை பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 5-ம் இடத்திற்கு குரு வருகின்றார். அப்பொழுது குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘ஆறில் குரு ஊரில் பகை’ என்பதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். குருவின் நேரடிப்பார்வை பதிவதால் தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சப்தம ராகுவின் ஆதிக்கத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சலுகைகளும் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. ராமதூதன் வழிபாடு சேமிப்பை உயர்த்தும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் பழிகள் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் உருவாகலாம். இல்லம் கட்டுவதில் தடை ஏற்படலாம். எதையும் துணிந்து செய்ய இயலாது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய பெயர்ச்சியாகும். அதிக விரயத்தைச் சந்திக்கும் பெயர்ச்சியாகவும் அமையப் போகின்றது. தன்னம்பிக்கை, தைரியம், தளராத உழைப்பு ஆகிய மூன்றும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தாய் மற்றும் சகோதரர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியிலும் விரயம் உண்டு. கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாளுங்கள். பணிபுரியும் பெண்கள் கொடுத்த வேலையை முறையாகச் செய்தால் நல்ல பெயர் எடுக்கலாம். பிறரிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் உருவாகும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
எட்டில் வருகிறது ராகு..எதிலும் இனி கவனம் தேவை..
துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதியன்று உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகின்றார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். டிசம்பர் 26-ந் தேதி சனி, பெயர்ச்சியாகி மகர ராசிக்குச் செல்கின்றார். இக்காலத்தில் அர்த்தாஷ்டமச்சனி யின் ஆதிக்கம் வருகின்றது. 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். அதுமட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலமறிந்து செயல்படுவதன் மூலமும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கலாம். கிரகங் களின் சஞ்சாரம் பலமிழந்திருக்கும் பொழுது, பரிகாரங்களும், வழிபாடுகளும் ஓரளவு கைகொடுக்கும்.
அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் ராகு
தனவரவைத் தரும் கேது
ராகு, இப்பொழுது சஞ்சரிக்கப்போவது எட்டாமிடமாகும். ‘அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போகின்றாரே’ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். ‘மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பது பழமொழி. மேலும் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் குருவின் பார்வையில் ராகு இருப்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. விரயம் வந்தாலும் வருவதற்கு முன்னதாகவே வரவு வந்து விடும். இதுபோன்ற சமயங்களில் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளலாம். புதிய கூட்டாளிகளை இணைத்து தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்க கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் அதைப் பிரயாசை எடுத்துதான் காப்பாற்ற இயலும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். நீங்கள் செய்யும் பொறுப்பான பணி களை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் முறையாக நிறைவேறாது. எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நேரமிது.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பொருளதாரப் பற்றாக்குறை அகலும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் வரை ஒருசிலருக்கு அமையும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நெருக்கமான உறவினர்கள் உங்கள் பணிக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுப்பர். பழுதடைந்த வீட்டை சீர்படுத்தும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணியாளர் தொல்லை அகலும். முயற்சிகளில் இருந்த இடையூறுகள் அகலும். எதிர்நீச்சல் போட்டு இதுவரை காரியம் சாதித்த நீங்கள் இனி எளிய முறையில் காரியம் சாதிப்பீர்கள். மனக்கவலைகள் அகல உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். அரசு சார்ந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்். சந்திரன் சாரத்தில் ராகு செல்வதால் இக்காலத்தில் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார விருத்தி அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய வழிபிறக்கும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் இதுவரை இருந்த தடை அகலும். குறிப்பாக பணி நிரந்தரம் பற்றிய நல்ல செய்தி வரலாம். ‘வேலைக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வந்து சேரும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்நிற்பவர் ஆவார். பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது. பகை கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ‘வருமானப் பற்றாக்குறை அகல என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரி வினை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். ஒத்து வராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர். இடமாற்றங்கள் இப்பொழுது எதிர்பார்த்த விதத்தில் அமை யும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பங்காளிப் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே அதிகப்பொறுப்புகள் வந்து ஆச்சரியப்பட வைக்கும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார் சனி பகவான். அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார ரீதியாக வந்த நெருக்கடிகள் அகலும். குடும்ப வருமானம் கூடுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்றவை சிறப்பாக இருக்கும். ‘வாங்கிய சொத்தை விற்றுவிட்டோமே’ என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடமையில் இருந்த தொய்வு அகலும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகம் என்பதால் இக்காலத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரமிது. பிரச்சினைகளை அதிகம் சந்தித்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
எட்டாமிடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், தன ஸ்தானத்து கேதுவால் வருமானம் திருப்திகரமாக அமையவும் இல்லத்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது. நிலைமை சீரான பிறகு பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கு...
ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக நற்பலன்கள் வந்து சேர நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டமத்து ராகுவால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்க விட்டுக்கொடுத்துச் செல் லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவை. இடமாற்றம், விரயம் உண்டு. அறுபத்து மூவர் வழிபாடு அமைதியை வழங்கும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
நான்கில் வந்தது குரு பகவான், நலம்பெறக் கவனம் மிகத்தேவை!
துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று நான்காமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 4-ம் இடத்தை ‘அர்த்தாஷ்டம ஸ்தானம்’ என்று சொல்வது வழக்கம். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மனக்கவலைகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு நிம்மதிக் குறைவு உருவாகும். சொந்தம், சுற்றங்களின் பகைகளை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள், வேலையின்மை காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப நேரிடும். வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை. இடையில் சில மாதங்கள் குரு பகவான் 5-ம் இடத்திற்கு செல்கின்றார். அப்பொழுது நற்பலன்கள் ஏற்படும். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசா புத்தி பலமிழந்தவர்கள், வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கப் போகின்றார். குரு பகவான் இருக்குமிடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம். அந்த அடிப்படையில் குரு பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ‘அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று சொன்ன மருத்துவர்கள், சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடுவர். உங்கள் ராசி நாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அந்த குரு நீச்சம் பெற்று பார்ப்பதால், அந்த பார்வைக்கு நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும். இதற்கு நீங்கள் தொடர்ந்து குருவை வழிபட வேண்டும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் புனிதமடைகின்றது. முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ‘தொழிலை விரிவு செய்ய வங்கிகளிலும் கடன் கிடைக்கவில்லை, வள்ளல்களிடமும் கடன் கிடைக்கவில்லை’ என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கப்போகின்றது. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளாக வாங்க சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத் தகவல் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் ஒருசிலருக்கு கிடைக்கலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சூரியன். அதாவது லாபாதிபதி. அவரது சாரத்தில் குரு வலம் வரும்பொழுது, தொழிலில் லாபம் இரு மடங்காக உயரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். கிளைத்தொழில் தொடங்கும் முயற்சியில் ஒருசிலர் ஆர்வம் காட்டுவர். ஒப்பந்தங்கள் தேடி வரும். இருப்பினும் அவற்றை ‘உரிய காலத்தில் நிறைவற்ற முடியுமா?’ என்று ஆராய்ந்து, அதன்பிறகு கையெழுத்திடுவது நல்லது. மூத்த சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். கவுரவப் பதவிகள் ஒருசிலருக்கு கிடைக்கலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சந்திரன். அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ‘வியாபாரத்தை விரிவு செய்ய நண்பர்களை கூட்டாகச் சேர்த்துக் கொள்ளலாமா?’ என்று யோசிப்பீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு இப்பொழுது பணி நிரந்தரமாகி நிலையான வருமானத்திற்கு வழிகிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவானின் சஞ்சாரம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்களுக்கோ, உங்கள் உடன்பிறந்தவர்களுக்கோ, திருமண வாய்ப்பு கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எனவே எந்த காரியத்தைச் செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்ய இயலும். வாங்கல்- கொடுக்கல்கள் திருப்தி தரும். உதாசீனப்படுத்தி விலகிச்சென்ற உறவினர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்வர். குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், கூடுதல் சம்பளம் கிடைக்குமிடத்தில் வேலை செய்ய முயற்சிப்பர். நட்பால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப் போவதால், அவர் 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சம் பலன் தரும்’ என்பதால், இக்காலத்தில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கும்ப குருவின் ஆதிக்க காலத்தில் பொன், பொருட்கள் சேரும். புகழ்கூடும். உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத் தகவல் வந்து சேரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். வசதிகள் பெருகும் நேரமிது. தொழில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். எதைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால், அது வலிமை இழக்கும் இந்த நேரம் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் அனுகூலத்தோடு வருங்காலத்தை நலமாக்கிக்கொள்வீர்கள். பணிபுரியும் இடத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தை பெருக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். மறைமுகப் பகை மாறும். தொழில் செய்யுமிடம் வாடகை செலுத்துமிடமாக இருந்தால், அதை விலை கொடுத்து வாங்குமளவிற்கு உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும். திருமணத்தடை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து முல்லைப்பூ மாலை சூட்டி, கவசப் பாராயணங்களை படித்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேலும் வெள்ளிக்கிழமை சுக்ரனுக்குரிய துதிப்பாடல்களை பாடி வழிபடுவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு, சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நேரமிது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஊர் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் தானாக வந்து சேரும். குடியிருக்கும் வீட்டால் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/18/2021 1:11:12 AM
http://www.dailythanthi.com/astrology/astrobenefits/libra