காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்


காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்
Daily Thanthi 2022-05-26 12:45:52.0

புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எக்ஸ் விமானப் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும அமைச்சர்கள் வரவேற்றனர்.

சாலை மார்கமாக காரில் சென்ற பிரதமர், சாலையோரங்களில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள், பொதுமக்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் காரிலிருந்து இறங்கி சிரித்தப்படியே அனைவருக்கும் கையசைத்தார். 


Next Story