காசா மீது 20 நாட்களாக தொடரும் குண்டுமழை ... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
x
Daily Thanthi 2023-10-26 21:53:00.0
t-max-icont-min-icon

காசா மீது 20 நாட்களாக தொடரும் குண்டுமழை

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர்.

அதோடு தரை, கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,400 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்து, காசா மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி கடந்த 20 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது.

1 More update

Next Story