உக்ரைன் போரில் லிசிசான்ஸ்க் நகரம் மீது ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 5-வது மாதமாக நீடிக்கிறது. கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தற்போது கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில், அந்த நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் தாக்கி வருகின்றன. இந்த தகவலை லுகான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரமாக அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story