பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு


பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
x
Daily Thanthi 2022-07-03 05:58:01.0

ரஷியா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை வான் தடுப்பு சாதனங்களை கொண்டு வானிலே இடைமறித்து தங்கள் ராணுவம் அழித்ததாக லுகான்ஸ்கோ கூறினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இதேபோல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் எங்களுக்கு கோபம் மூட்டுவதாக அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.


Next Story