இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
x
Daily Thanthi 2025-10-20 14:14:59.0
t-max-icont-min-icon

இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள் 

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு, காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி உள்ளது. இதன்படி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையில் வடக்கே அகல் விளக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், தமிழகத்தில் வானை வண்ணமயம் ஆக்கும் பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story