
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கைகலப்பு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் வந்தார். அப்போது அவரை பூசாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஶ்ரீதர் வாண்டையார் பூசாரி ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் பூசாரிகளை வெளியேற்றச் சொல்லி ஶ்ரீதர் வாண்டையார் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் சமரசம் பேசினர். அப்போது அங்கு வந்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஶ்ரீதர் வாண்டையார் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
Related Tags :
Next Story






