கஞ்சா விற்ற 2 போ கைது

கஞ்சா விற்ற 2 பேரை போலீசா கைது செய்தனா.
கஞ்சா விற்ற 2 போ கைது
Published on

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கனந்தல் அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜர் மகன் மதன்குமார்(வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சரவணபாக்கம் கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்ற துலங்கம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் இருசன் (23) என்பவரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com