

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 15 பெண்கள் உள்பட மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 39 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.