எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 3:08 PM GMT (Updated: 9 Sep 2021 3:08 PM GMT)

பழனி அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி: 
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆயக்குடி பஸ்நிறுத்தத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆயக்குடி பேரூர் செயலாளர் பாரீஸ் அகமது தலைமை தாங்கினார். பேரூர் தலைவர் ரியாஸ், துணைத்தலைவர் முகமது பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேற்கு மாவட்ட செயலாளர் சதாம்உசேன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, டெல்லி போலீஸ் அதிகாரி ராபியா சைபியின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story