அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Published on

அரக்கோணம்

அரக்கோணத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இதனை தமிழக அரசு ராணிப்பேட்டைக்கு மாற்றுவதற்கான முயற்சி நடப்பதாக கூறி இதனை கண்டித்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், பழனி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com