திருப்பதியில் ஆக்டோபஸ் சிறப்பு படையினர் நள்ளிரவில் பாதுகாப்பு ஒத்திகை

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்ததால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் ஆக்டோபஸ் சிறப்பு படையினர் நள்ளிரவில் பாதுகாப்பு ஒத்திகை
Published on

திருப்பதி,

திருப்பதி திருமலையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆக்டோபஸ் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் நள்ளிரவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். துப்பாக்கிகளுடன் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் திடீரென விஜிலென்ஸ் அலுவலகம் மற்றும் பாதுகாவலர் தங்குமிடத்திற்குள் புகுந்து, பிணைக் கைதிகளை மீட்பது போல ஒத்திகை நடத்தினர்.

அப்போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்ததால் பக்தர்களிடையே அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் அங்கு நடந்து கொண்டிருப்பது பாதுகாப்பு ஒத்திகை என்பதை அறிந்து அவர்கள் அமைதியடைந்தனர். திருமலையின் பாதுகாப்பு குறித்த இந்த அதிரடி ஒத்திகை அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com