தெலுங்கானா விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

தெலுங்கானா விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்
டெல்லி,
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கானாப்பூர் கேட் பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி அரசு பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த கடினமான சூழ்நிலையில் உறவினர்களை இழந்துவாடு குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






