வாலிபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


வாலிபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x

கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி ரோடியர் மில் மைதானத்தில் கஞ்சா விற்றதாக காஞ்சீபுரத்தை சேர்ந்த அன்புகுமார் விசுவநாதன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 184 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அன்புகுமார் விசுவநாதன் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் விற்பனை செய்தார் என்பதை கண்டறியவும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யவும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கான புதுவை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து 2 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story