தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறை


தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
x

17 வயது சிறுமி பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறையில் அடைக்க புதுவை கோர்ட்டு உத்தரவு.

புதுச்சேரி

வில்லியனூரை சேர்ந்தவர் வினோத் என்ற வினோத்குமார் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கோவில் திருவிழாவின்போது அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். பெற்றோர் தரப்பில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு கோர்ட்டில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் வினோத்குமார் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

மேலும்பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.


Next Story