முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
புதுச்சேரியில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
புதுச்சேரி
தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது82). இவர், இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை வினோபா நகரை சேர்ந்தவர் பிலிப்ஸ் (52). இவர், சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்தது. மேலும் கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதற்கிடையே நேற்று அதிகாலை வீட்டில், பிலிப்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த 2 தற்கொலைகள் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story