2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை


2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
x

நெட்டப்பாக்கம் அருகே 2 ரவுடிகளை ஊருக்குள் நுழைய தடைவிதித்து மாவட்ட கலகெ்டர் உத்தரவிட்டார்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர்கள் விநாயகமூர்த்தி (வயது 42). பாரதிராஜா (32). இவர்கள் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் ஊருக்குள் நுழைந்தால் அசம்பாவித சம்பவம் ஏற்படும் என்று போலீசார் கருதினர்.

எனவே அவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், புதுச்சேரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 2 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story