பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

குருமாம்பேட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

புதுவை மேட்டுப்பாளையம் அடுத்த குருமாம்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ரதீனா (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென ரதீனா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story