6 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை


6 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
x

புதுச்சோியில் 6 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

புதுவை விஸ்வநாதன் நகரை சேர்ந்த டிராக் சிவா (வயது 31), சின்னையாபுரத்தை சேர்ந்த பிரபு நாராயணன் (33), குருசுக்குப்பத்தை சேர்ந்த ஞானவேல் (வயது 31), அவரது தம்பி ஞானசேகர் (30), வாழைக்குளத்தை சேர்ந்த வெங்கசேடன் (33), அவரது தம்பி அரவிந்தன் (31) ஆகிய 6 ரவுடிகள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் 6 பேரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கும்படி முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவுடிகள் 6 பேரையும் 2 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த மணிமாறன் (29), வேல்ராம்பேட் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த கல்வி செல்வம் (30), பி.என்.பாளையம் பெருமாள் நகரை சேர்ந்த சதீஷ் (21) ஆகிய 3 ரவுடிகளையும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story