மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று
x

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,586 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 83 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 136 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேர், வீடுகளில் 775 பேர் என 778 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 5.23 சதவீதமாகவும், குணமடைவது 98.40 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 478 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,490 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 6 ஆயிரத்து 128 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 18 லட்சத்து 76 ஆயிரத்து 528 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.


Next Story