அரசுப்பள்ளி நுண்கலை ஆசிரியர்களின் கலை கண்காட்சி
அரசுப்பள்ளி நுண்கலை ஆசிரியர்களின் கலை கண்காட்சியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பணி செய்யும் நுண்கலை ஆசிரியர்களின் கலை கண்காட்சி கடற்கரை சாலையில் உள்ள கண்காட்சி கூடத்தில் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலர் தனசெல்வம் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் நுண்கலை ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் அவர் களது படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story