தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல்


தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
x

சொத்து தகராறில் தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 36). இவர் தனது மாமனார் ஆறுமுகம் என்பவரது வீட்டில் தனது மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இதற்கிடையே சந்திரசேகரன் மனைவி கவிதாவுக்கும், அவரது சகோதரர் பாஸ்கருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே வீட்டை காலி செய்யுமாறு கவிதாவையும், அவரது கணவர் சந்திரசேகரனையும் பாஸ்கர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்திரசேகரன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் உள்ளே நிறுத்த முயன்றார். அப்போது பாஸ்கரின் உறவினர்களான வேல்முருகன், கோபால், வேம்பு, ராஜலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சந்திரசேகரனை தாக்கினர். மேலும் தடுக்க முயன்ற அவரது மனைவி கவிதா, அவரது சகோதரிகள் கலைவாணி, கீதா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 4 பேரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story