புதுவையில் தூய்மை பள்ளிகளுக்கு விருது


புதுவையில் தூய்மை பள்ளிகளுக்கு விருது
x

புதுவையில் சுவச் வித்யாலயா புரஸ்கார்-2021-22ம் கல்வியாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தூய்மை பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி

மத்திய அரசின் 'சுவச் வித்யாலயா புரஸ்கார்' என்ற திட்டத்தின் கீழ் 2021-22ம் கல்வியாண்டில் புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் உள்ள 732 பள்ளிகளில் 726 பள்ளிகள் பதிவு செய்திருந்தன.

இதில் 713 பள்ளிகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த பள்ளிகள் புதுச்சேரி அரசு கல்வித்துறையின் மூலம் சிறந்த மதிப்பீட்டாளர்களை கொண்டு தேசிய இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு விருது பெறும் பள்ளிகள் தரவரிசைபடுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டன.

சுவச் வித்யாலயா புரஸ்கார்-2021-22ம் கல்வியாண்டுக்கான விருது வழங்கும் விழா கல்வித்துறை வளாகத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் வல்லவன் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து பிரிவு, தண்ணீர், கழிவறை, கை கழுவுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.


Next Story