சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு


சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
x

பா.ஜ.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வில்லியனூர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி பா.ஜ.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை தூய்மை செய்து மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடற்கரை சாலையில் உள்ள காந்தி, அம்பேத்கர், குபேர், பாரதியார் சிலைகள் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் அவர்களது சிலைகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர் சாய் சரவணன்குமார், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், மாநில துணை தலைவர்கள் செல்வம், முருகன், மாநில செயலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story