மின்தடையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு, கவர்னர் தமிழிசை உத்தரவு


மின்தடையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு, கவர்னர் தமிழிசை உத்தரவு
x

பொதுமக்களுக்கு பாதிக்ககாத வகையில் மின்தடையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரி

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியின் கள நிலவரத்தை தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிந்து கொண்டு கண்காணித்து மின் தடையை உடனே சரிசெய்ய வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளேன். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

அதையும் மீறி பொதுமக்களை சிரமப்படுத்தி தங்களின் கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடாமல், பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் போராட்டங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story