கழிவுநீர் வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


கழிவுநீர் வாய்க்காலில்   அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

முத்தியால்பேட்டை கழிவுநீர் வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை கழிவுநீர் வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் பிணம்

முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தை ஒட்டியுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இன்று காலை ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கால்வாயில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவர் காவலாளிக்கான சீருடை மற்றும் காலணிகள் அணிந்திருந்தார். அவரது சட்டை பாக்கெட்டிற்குள் செல்போன் இருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தது யார்? அவரை யாராவது கொலை செய்து பிணத்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றனரா? அல்லது கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story