மினிலாரி திருட்டு
மினிலாரி திருட்டு குறித்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
நெல்லித்தோப்பு கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது 42). சொந்தமான மினிலாரி வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது மினிலாரியை புதுவை-கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் முன் நிறுத்தி விட்டு கடலூருக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மினிலாரியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story