மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

முத்தியால்பேட்டையில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய மா்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 32). கொசக்கடை வீதியில் உள்ள நகை கடையில் வேலை செய்கிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை காந்தி வீதியில் நிறுத்திவிட்டு சாப்பாடு வாங்க ஓட்டலுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story