மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருபுவனை
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 1-ந்தேதி நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதல் கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 2-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று 4-ம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து மேள தாளம் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சபாநாயகர் செல்வம், திருபுவனை எம்.எல்.ஏ. அங்காளன், கோவில் திருப்பணி தலைவர் பெருமாள், சிறப்பு அதிகாரி சுகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story