தேசியக்கொடி ஊர்வலம்


தேசியக்கொடி ஊர்வலம்
x

புதுவையில் அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் இன்று நடந்தது.

புதுச்சேரி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுத்துறைகள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதுவை அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் இன்று நடந்தது. ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கொக்குபார்க், காமராஜ் சாலை வழியாக சென்று சாரம் அவ்வை திடலில் நிறைவடைந்தது.


Next Story