தவளக்குப்பத்தில் தேசியக்கொடி ஊர்வலம்


தவளக்குப்பத்தில் தேசியக்கொடி ஊர்வலம்
x

தவளக்குப்பத்தில் தேசியக்கொடி ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

அரியாங்குப்பம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேசியக்கொடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மணவெளி தொகுதியில் நடந்த ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய ஊர்வலம் பூரணாங்குப்பம் சாலையில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமிகாந்தன், சக்திபாலன், தெய்வசிகாமணி, தட்சிணாமூர்த்தி, சக்திவேல், ஜோதி, செந்தில்கண்ணன், மாசிலாமணி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story