காரைக்காலுக்கு நிரந்தர கலெக்டர்


காரைக்காலுக்கு நிரந்தர கலெக்டர்
x

காரைக்காலுக்கு நிரந்தர கலெக்டர் அமைக்கக் கோரி வளர்ச்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.

காரைக்கால்

காரைக்கால் வளர்ச்சிக்குழு சிறப்பு கூட்டம் அதன் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் திருமால்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தர கலெக்டரை நியமிக்கவேண்டும், நேரு மார்க்கெட்டை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், மின்துறையை தனியார் மயமாக்காமல் மாநில அரசு தடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


Next Story