நகை கடையில் திருடிய பிளம்பர் கைது


நகை கடையில் திருடிய பிளம்பர் கைது
x

புதுவையில் நகைக்கடையில் திருடிய பிளம்பரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி

புதுவை லூயிபிரகாசம் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது49). இவர் பாரதி வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திவ்யா, கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திவ்யாவின் நடவடிக்கையில் தேவநாதனுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, 15 பவுன் தங்கம், 700 கிராம் வெள்ளி நகைகளை திருடி 2-வது கணவரான பிளம்பர் அருண்குமாரிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா, அருண்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இடையஞ்சாவடியில் அருண்குமார், பதுங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திவ்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story